மிக மிக அபாயகரமான போக்கு இது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது அடுத்தடுத்து சுமத்தப்படும் பணி.
நாடு முழுக்க இதே நிலவரம் தான்.
Whatsapp வந்த பிறகு படு மோசம். அதிலும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சகட்டுமேனிக்கு குரூப் ஆரம்பித்து மாணவர்கள் தொடர்பாக விதவிதமான புள்ளி விவரங்களை கேட்கிறது என்கின்றார்கள்.
வகுப்பறையில் மாணவ மாணவியருக்கு பாடம் எடுப்பதைவிட இந்த வாட்ஸப் குரூப்புகளுக்கு பதில் போடுவதற்கே பொழப்பு போய் விடுகிறது என்று புலம்புகின்றனர் ஆசிரியர்கள்..
சமூக நலத்துறை மூலம் செய்ய வேண்டிய வேலையை நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் பாடங்களை நடத்துவதற்கு தயார் செய்யும் பணி அடியோடு நாசமாகிறது கொதிக்கின்றனர்.
கல்வி தரத்தை மேம்படுத்த விடாமல் முட்டுக்கட்டை போடும் விஷயம் பற்றி 'இன்றிரவு எட்டு மணிக்கு' கோஷ்டிகள் விவாதிக்கும் என்றெல்லாம் நாம் எதிர்பார்ப்பதில்லை..
தேர்தலுக்குப் பிறகாவது பேசுங்கப்பா...


No comments:
Post a Comment