எலியால் கிலி! முன்கூட்டியே விலையில்லா சீருடைகளை வழங்குவதால் அதனை பாதுகாப்பதில் சவால் என தலைமை ஆசிரியர்கள் புலம்பல்!(பத்திரிகை செய்தி)
இந்தாண்டுக்கான புத்தகம், நோட்டு உள்ளிட்டவை வழங்க கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது. சத்துணவு சாப்பிடும் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச சீருடைகளும் முன்கூட்டியே மாவட்ட நோடல் மையங்களுக்கு அனுப்பி இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதி அரசு, உதவி பெறும் பள்ளிகள், சீருடைகளை முன்கூட்டியே பெற்றுச்செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கோடை விடுமுறையில் ஆசிரியர்கள் வெளியூர் சென்று விட்டதால் அதை தலைமையாசிரியர் சென்று பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment