நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதன் காரணமாக, TET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க இயலாது - பதவி உயர்வு கோரி 10 நபர்கள் விண்ணப்பித்த நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநர் நிராகரிப்பு!
கள்ளக்குறிச்சியை சேர்ந்த திரு N. இளங்கோ மற்றும் 9 நபர்கள் TET - தேர்ச்சி பெற்ற எங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு வழங்கிய கோரிக்கை மனுவின் அடிப்படையில் அந்த10 நபர்களையும் அழைத்த இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி பதவி உயர்வு வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை எனக்கூறி அதற்கான செயல்முறைகளையும் வெளியிட்டுள்ளார்

No comments:
Post a Comment