தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும்12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கின. மாநிலம் முழுவதும் தனித்தேர்வர்களுடன் சேர்த்து, 8 லட்ச மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர்.
மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 6 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது.
தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment