பள்ளிக்கல்வி - 2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள - பட்டதாரி ஆசிரியர்கள்/முதுகலை ஆசிரியர்கள் - காலிப்பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலம் தற்காலிக ஆசிரியர்களாக 02.06.2025 முதல் நியமனம் செய்வது - தொடர்பாக.
பார்வையில் காணும் பள்ளிக்கல்வி இயக்குநரின் குறுஞ்செய்தி தகவலின் படி, நடப்பு 2025-26 ஆம் கல்வியாண்டில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நிரப்ப தகுந்த காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் 02062025 முதல் பள்ளி மேலாண்மை குழு (SMC) முற்றிலும் தற்காலிக அடிப்படையில் கீழ்க்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு எவ்வித புகார்களும் இடமளிக்காவண்ணம் பணி நியமனம் மேற்கொள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிபந்தனைகள்:
1 நிரப்ப தகுந்த காலிப்பணியிடத்தில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலம் தற்காலிக ஆசிரியர்களை நிரப்ப வேண்டும்.
2. மகப்பேறு விடுப்பில் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலம் தற்காலிக ஆசிரியர்களை நிரப்ப வேண்டும்.
3. நீண்ட நாள் (6 மாதங்களுக்கு மேல்) விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் பணியிடத்திலும் பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலம் நிரப்பலாம்.
4. சென்னை - 6 பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் மாற்றுப்பணியில் சென்றுள்ள ஆசிரியர்களின் பணியிடத்திற்கும் பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலம் நிரப்பலாம்.
5. பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் B.Ed, தேர்ச்சியுடன் ஆசிரியர் தகுதித்தேர்விலும் (TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
6. முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு பாடம் சார்ந்து தகுதி வாய்ந்த முதுகலை பட்டம் B.Ed. தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கலாம்.
7. பள்ளி மேலாண்மை குழு (SMC) வின் தீர்மானத்தின் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். இதில் எவ்வித புகாருக்கு இடமளிக்கா வண்ணம் பணி நியமனம் மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் நிரப்ப தகுதிவாய்ந்த காலிப்பணியிடங்களில் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் 02.06.2025 முதல் பணியேற்கும் வகையில் தக்க நடவடிக்கை மேற்கொண்டும், பணி நியமனம் செய்யப்பட்ட விவரங்களை 02.06.2025 அன்றே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் வழங்குவதுடன், அதன் கையொப்பமிட்ட பிரதியை அன்றே நேரில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்
திருப்பத்தூர் மாவட்டம்
Click Here to Download - Temporary SMC Teachers Appointment - Instructions - CEO Proceedings - Pdf
No comments:
Post a Comment