தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் ( மே 16 ) வெளியிடப்படும்.
மார்ச் / ஏப்ரல் 2025 - இல் நடைபெற்ற 2024-2025 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு ( SSLC ) மற்றும் மேல்நிலை முதலாமாண்டு ( +1 ) பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 16.05.2025 ( வெள்ளிக்கிழமை ) அன்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் , பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலை 9.00 மணிக்கு வெளியிடப்படப்படவுள்ளது.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் இணையதள முகவரி மற்றும் கால நேரம் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
16.05.2025 காலை 10 ஆம் வகுப்பு முடிவும் , பிற்பகலில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியீடு.
தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் . பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் , பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும் , தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி ( SMS ) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
No comments:
Post a Comment