தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் ஜூன் 2ல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளும் ஜூன் 2ல் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்களுக்கு விரிவான அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
இதில் பள்ளிகள் செயல்பாடுகள் பள்ளி திறப்பு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாணவர்கள் சேர்க்கை நன்னெறி வகுப்பு கல்விசார் செயல்பாடுகள் போன்ற பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளனர்.
No comments:
Post a Comment