இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு செலுத்தி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் போனஸ் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கிடைக்காது என்பது வேதனையளிக்கிறது.
அரசின் பிற துறைகளில் பணிபுரியும் பகுதிநேர, தொகுப்பூதிய பணியாளர்கள் பொங்கல் போனஸ் பெறும்போது, பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்குவது தான் நியாயமாகும். எனவே, பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment