தனியார் பள்ளிகளை எப்பொழுது திறக்க வேண்டும் - புதிய அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 29, 2023

தனியார் பள்ளிகளை எப்பொழுது திறக்க வேண்டும் - புதிய அறிவிப்பு

 




தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், காலாண்டுத்தேர்வு  முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது.


இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, வரும், 3ம் தேதியும்; ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும், 9ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக்கல்வி துறை நேற்று முன்தினம் அறிவித்தது.


இந்நிலையில், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் திறப்பு குறித்து, தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், 'தமிழக பாடத்திட்டத்தில் செயல்படும் அனைத்து வகை சுயநிதி தனியார் பள்ளிகள், காலாண்டுத் தேர்வு முடிந்து வரும், 3ம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.


Post Top Ad