CPS - பங்களிப்பு ஓய்வூதிய நிதி முதலீடு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் - Asiriyar.Net

Friday, November 21, 2025

CPS - பங்களிப்பு ஓய்வூதிய நிதி முதலீடு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்




தமிழகத்​தில் அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களின் பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்ட நிதிக்கு அதிக வட்டி பெறும் நோக்​கில் ‘குரூப் இன்​சூரன்​ஸ்’ திட்​டத்​தில் முதலீடு செய்ய அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது என்று உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.



அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​கான புதிய ஓய்​வூ​திய திட்​டத்தை ரத்து செய்​து, பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த உத்​தர​விடக் கோரி திண்​டுக்​கல்​லைச் சேர்ந்த பிரடெரிக் எங்​கெல்ஸ் என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​துள்​ளார்.


அந்த மனு​வில், “தமிழகத்​தில் 1.4.2003-க்கு பிறகு பணி​யில் சேர்ந்த அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்கு புதிய ஓய்​வூ​தி​யத்திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. எனினும், இது​வரை புதிய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​துக்​கான விதி​முறை​கள் வகுக்​கப்​பட​வில்​லை. மத்​திய அரசு 2013-ல் ஓய்​வூ​திய நிதி ஒழுங்​காற்று மேம்​பாட்டு ஆணை​யம் அமைத்​துள்​ளது. ஆனால் தமிழக அரசு இதை பின்​பற்​ற​வில்​லை.



ஓய்​வூ​தி​யத் திட்​டம் தொடர்​பாக ஆய்வு நடத்​திய வல்​லுநர் குழு, அரசிடம் பல்​வேறு பரிந்​துரைகளை அளித்​துள்​ளது. இந்​தப் பரிந்​துரைகளை பின்​பற்​று​வது தொடர்​பாக அரசாணை​யோ, விதி​முறை​களோ வகுக்​கப்​பட​வில்​லை. இனால் ஓய்​வூ​தி​யப் பலன்​களை பெற முடி​யாமல் பலர் தவிக்​கின்​றனர்.


எனவே, புதிய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ரத்து செய்​துவிட்டு, பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த உத்​தர​விட வேண்​டும்” என்று கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனு ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, தமிழக அரசின் நிலைப்​பாட்டை தெரிவிக்​கு​மாறு உத்​தர​விடப்​பட்​டிருந்தது.


இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நிதித் துறைச் செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



அதில், பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎப்) விதிகளில் திருத்தம் செய்து, 27.5.2004-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையிலேயே பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.


வருங்கால வைப்புநிதி விகிதம் கருவூல ரசீதுகளின் வருவாயைவிட அதிகமாக இருப்பதால் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் வட்டியில் இடைவெளி உள்ளது


இதை ஈடுகட்ட, பங்களிப்பு ஓய்வூதிய நிதியை இந்திய காப்பீட்டுக் கழகத்தின் பணப் பலனுடன் கூடிய புதிய குழு (குரூப் இன்சூரன்ஸ்) ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்ய அரசு நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தேக்க நிலை இருப்பதாக மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை.


கடந்த அக்டோபர் மாதம் வரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணம் கேட்டு 54,000 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இவற்றில் 51,000 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.



எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும், இவ்வழக்கு விசாரணையில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக காலஅவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை டிச. 4-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



No comments:

Post a Comment

Post Top Ad