18.11.2025 - போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவு ? - Asiriyar.Net

Tuesday, November 25, 2025

18.11.2025 - போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவு ?

 





கடந்த 18ஆம் தேதி ஜாக்டோ ஜியோ நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்ய பரிந்துரை

போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக "வேலையில்லை என்றால் சம்பளம் இல்லை" ("no work, no pay") என்ற விதியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் உட்பட பல துறைகளில் பின்பற்றப்படும் ஒரு பொதுவான நடைமுறையாகும், இது போராட்டங்களில் ஈடுபடும்போது சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்பதைக் குறிக்கிறது

கடந்த நவம்பர் 18ஆம் தேதி பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் இணைந்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர் 

மேலும் அதே நாளில் வருவாய்த்துறை அலுவலர்கள் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் திருத்த பணிகளை புறக்கணித்து அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர் 

இந்நிலையில் அன்று ஒரு நாள் போராட்டம் செய்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.


No comments:

Post a Comment

Post Top Ad