மழையில் பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு - Asiriyar.Net

Thursday, November 16, 2023

மழையில் பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

 





பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்

அதில், அதி கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது எனவும், விடுமுறை குறித்த முடிவை, பள்ளி துவங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்னதாக எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும், மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.


பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாட்களில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


விடுமுறை காரணமாக எந்த பாடங்களும் விடுபடாமல் மாணவர்களுக்கு முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி இருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிகள் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post Top Ad