மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, March 1, 2024

மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி

 




+2 பொதுத்தேர்வு பணியில் சுணக்கமாக இருந்ததாக மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 




தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.


வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபா. +2 பொதுத்தேர்வு பணியில் சுணக்கமாக இருந்ததாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வு துவங்குவதற்கு முன்பே, ஒரு மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவது முதல் முறை ஆகும்.


தேர்வு பணிகளில் சுணக்கமாக இருந்தாலோ, முறைகேடுகளுக்கு உடந்தை போனாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.



Post Top Ad