தேர்தல் பணி பயிற்சி ஆணை நாளை (22.03.2024) வழங்கப்படுகிறது - CEO Letter - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 21, 2024

தேர்தல் பணி பயிற்சி ஆணை நாளை (22.03.2024) வழங்கப்படுகிறது - CEO Letter

 

நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தேர்தல் 2024 - தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணியாளர்களுக்கான நியமன ஆணையானது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலம் பெறப்பட்டுள்ளது , 



எனவே தங்கள் பள்ளி சார்பான தேர்தல் பணி ஆணையினை நாளை காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ( இடைநிலை ) தனிநபர் மூலம் நேரில் வந்து பெற்றுச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலை 22.03.2024 மாலை 3 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது . முதலாவது தேர்தல் பயிற்சி வகுப்பு 23.03.2024 அன்று நடைபெறவுள்ளதால் அவசரம் கருதி உடன் நடவடிக்கை மேற்கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது.


மாவட்டக் கல்வி அலுவலகம்





Post Top Ad