நான்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் - CEO அறிவிப்பு - Asiriyar.Net

Saturday, January 6, 2024

நான்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் - CEO அறிவிப்பு

 




மிக்ஜம் புயல் காரணமாக பள்ளிகளுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தலா இரு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மாா்ஸ் தெரிவித்துள்ளாா்.


அவா் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மிக்ஜம் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை மாவட்டத்தின் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.


அந்த விடுமுறை நாள்களை ஈடுசெய்யும் வகையில் ஜனவரியில் 6, 20-ஆம் தேதிகள், பிப்ரவரியில் 3, 17-ஆம் தேதிகள் ஆகிய சனிக்கிழமைகளில் பள்ளிகள் முழு நேரமாக செயல்படும். இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Top Ad