நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டுமா எழுத வேண்டும் எனில் எந்த தாள் எழுத வேண்டும்?
1 9 1970க்கு பின் பிறந்த நாளைக் கொண்டு தற்பொழுது பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் இருக்கும் அனைவரும் பணியில் தொடர தகுதித் தேர்வு தாள் இரண்டை எழுதி வெற்றி பெற வேண்டும் அவர்கள் பதவி உயர்வுக்கு என்று தனியாக எந்த தேர்வும் எழுத வேண்டாம்
1 9 2025 முதல் 31 8 2030 வரை பணி ஓய்வு பெறக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் தொடர தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை ஆனால் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதி தேர்வு தாள் இரண்டை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்
மொத்தத்தில் பணியில் தொடரவோ அல்லது பதவி உயர்வு பெறவோ அவர்கள் தாள் இரண்டை மட்டும் எழுதினால் போதுமானது

No comments:
Post a Comment