2% அகவிலைப்படி உயர்கிறது!
01.01.2026 முதல் அகவிலைப்படி 58% லிருந்து 60% ஆக அதிகரிக்கிறது.
அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வின் அடிப்படையில், ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்.
கடந்த ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 வரையிலான காலத்தில், விலைவாசி உயர்வு குறியீட்டு எண் இன்று வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில் 01.01.2026 முதல், அகவிலைப்படி 2% உயர்ந்து, 58% லிருந்து 60% ஆக அதிகரிக்கிறது.
இதற்கான முறையான அறிவிப்பு, மார்ச் மாதம் இறுதியில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்படும்.
ஒன்றிய அரசு அறிவித்தவுடன், தமிழ்நாடு அரசும், தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கும்.
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.


No comments:
Post a Comment