அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் பயிற்சி: பள்ளிக்கல்வித் துறையின் புதிய முன்னெடுப்பு - Asiriyar.Net

Friday, August 22, 2025

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் பயிற்சி: பள்ளிக்கல்வித் துறையின் புதிய முன்னெடுப்பு

 



அரசுப் பள்ளி மாணவர்​கள் திறனறி தேர்​வு​களை எளி​தில் எதிர்​கொள்​ளும் வித​மாக ‘ப்​யூச்​சர் ரெடி’ வினாக்​கள் மூலம் மாதம்​தோறும் பயிற்சி அளிக்​கப்பட உள்​ளது.


இதுதொடர்​பாக மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு மாநில கல்​வி​யியல் ஆராய்ச்​சி, பயிற்சி நிறு​வனம் (எஸ்​சிஇஆர்​டி) அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: அரசுப் பள்ளி மாணவர்​கள் உயர் சிந்​தனை வினாக்​களை எதிர்​கொள்​ளும் திறனை மேம்​படுத்​த​வும், கற்​றல் அடைவுத் தேர்​வு​களை தன்​னம்​பிக்​கை​யுடன் எழுத​வும் பல்​வேறு நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. இதன் தொடர்ச்​சி​யாக, ‘எதிர்​காலத்​துக்கு தயா​ராகு’ (Future Ready) எனும் முயற்சி தற்​போது முன்​னெடுக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​படி, மாதம்​தோறும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆங்​கிலம், கணிதம், அறி​வியல், பொது அறிவு சார்ந்த பாடங்​களில் மாணவர்​கள் கடந்த கல்வி ஆண்​டில் படித்த பாடப் பொருட்​களை ஒட்டி உயர் சிந்​தனை வினாக்​களை வடிவ​மைக்​கும் பணி எஸ்​சிஇஆர்​டிக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது.


அதன் அடிப்​படை​யில், ஆங்​கிலப் பாடத்​தில் பத்​தி​கள் வாசித்​தல் மற்​றும் இலக்​கணம், கணிதம், அறி​வியல் ஆகிய பாடங்​களில் சிந்​தனை திறனை மேம்​படுத்​தும் வினாக்​கள் ஒவ்​வொரு மாத​மும் தயாரிக்​கப்​பட்​டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறு​வனம் மூல​மாக பள்​ளி​களுக்கு அனுப்​பப்​படும். அதை பள்ளி தலைமை ஆசிரியர்​கள் பதி​விறக்​கம் செய்​து, கணிதம், ஆங்​கிலம், அறி​வியல் பாட ஆசிரியர்​களுக்​கும், பொது அறிவு வினாக்​களை வகுப்பு ஆசிரியருக்​கும் தரவேண்​டும். இந்த வினாக்​களைக் கொண்டு மாதம்​தோறும் மாணவர்​களிடம் மதிப்​பீடு நடத்த வேண்​டும். இதை தலைமை ஆசிரியர்​கள் முறை​யாக கண்​காணிக்க வேண்​டும்.


இதன்​மூலம் திறன் அடிப்​படையி​லான கேள்வி​களில் மாணவர்​கள் நிபுணத்​து​வம் பெறு​வதுடன், பல்​வேறு அடைவுத் தேர்​வு​களை​யும் எளி​தில் எதிர்​கொள்ள முடி​யும். பாடங்​களை மாணவர்​கள் நன்கு புரிந்து படிக்​க​வும் வழி​செய்​யும். ஆசிரியர் பயிற்​றுநர்​கள், வட்​டார, மாவட்ட, முதன்​மைக் கல்வி அலு​வலர்​கள் உள்​ளிட்ட பொறுப்பு அலு​வலர்​கள் தங்​கள் பள்ளி ஆய்​வின்​போது இந்த செயல்​பாடு​களின் நிலை குறித்து ஆசிரியர்​களு​டன் கலந்​துரை​யாட வேண்​டும். கலந்​தாய்​வுக் கூட்​டங்​களின் போதும் இதுபற்றி விவா​திக்க வேண்​டும்.இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.


அரசுப் பள்ளி மாணவர்​கள் எதிர்​காலங்​களில் உயர்​கல்விக்​கான நுழைவுத் தேர்​வு​கள் மற்​றும் வேலை​வாய்ப்​புக்​கான போட்​டித் தேர்​வு​களை எழுத இது உதவி​கர​மாக இருக்​கும்​ என்​று ஆசிரியர்​கள்​, கல்​வி​யாளர்​கள்​ தெரி​வித்​தனர்​.



No comments:

Post a Comment

Post Top Ad