மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு - Asiriyar.Net

Tuesday, August 19, 2025

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு

 



தமிழக அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்று அரசு அமைத்த குழு​விடம் அரசு ஊழியர்​ - ஆசிரியர் சங்​கங்​களின் நிர்​வாகி​கள் வலி​யுறுத்​தினர். அதோடு தங்​கள் கருத்​துகளை அறிக்கை​யாக சமர்ப்​பித்​தனர்.


பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் மற்​றும் மத்​திய அரசு அண்​மை​யில் அறி​முகப்​படுத்​தி​யுள்ள ஒருங்​கிணைந்த ஓய்​வூ​திய திட்​டம் (யுபிஎஸ்) ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்​பிக்க மூத்த ஐஏஎஸ் அதி​காரி​யான ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்​தது. அந்த குழு தனது அறிக்​கையை வரும் செப். 30-ம் தேதிக்​குள் தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்​ளது.


இந்​தச் சூழலில் ஆக. 18, 25, செப். 1, 8 என 4 நாட்​கள் கருத்​துகேட்பு கூட்​டம் நடந்​தது. அதன்​படி முதல் சுற்று கூட்​டத்​தில் தலை​மைச் செயலக சங்​கம், தமிழ்​நாடு அரசு அலு​வலர் ஒன்​றி​யம், தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கம், தமிழ்​நாடு அலு​வலக உதவி​யாளர் மற்றும் அடிப்​படை பணி​யாளர் சங்​கம், தமிழ்​நாடு ஆரம்​பப்​பள்ளி ஆசிரியர் கூட்​ட​ணி, தமிழ்​நாடு முது​நிலை பட்​ட​தாரி ஆசிரியர் சங்​கம் உள்பட 40 சங்​கங்​களின் நிர்​வாகி​கள் குழு​வின் தலை​வ​ரான ககன்​தீப் சிங் பேடியை சந்​தித்து மனு அளித்​தனர். அப்​போது அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்று வலி​யுறுத்​தினர்.


தலை​மைச் செயலக சங்க மாநில தலை​வர் கு.வெங்​கடேசன், செய​லா​ளர் சு.ஹரிசங்​கர் ஆகியோர் சமர்ப்​பித்த அறிக்​கை​யில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வது 100 சதவீதம் சாத்​தி​யமே. சிபிஎஸ் திட்​டத்​தில் பணி​யாற்றி ஓய்​வு​பெற்​றுள்ள 45,625 பேருக்கு ஒரு பைசா கூட ஓய்​வூ​தி​ய​மாக கிடைக்​க​வில்​லை. அரசுக்கு கூடு​தல் செல​வினம்​தான் ஏற்​படும். எனவே அத்​திட்​டத்தை அரசு பரிசீலிக்​கக் கூடாது.


சிபிஎஸ் திட்​டத்​தில் உள்ள அரசு ஊழியர்​களை சேமநல நிதி திட்​டத்​தில் (ஜிபிஎப்) இணைத்​து, அனை​வரை​யும் தமிழ்​நாடு ஓய்​வூ​திய விதி​களின்​கீழ் கொண்டு வர வேண்​டும். சிபிஎஸ் திட்​டத்​தில் ஏற்​கெனவே ஓய்​வு​பெற்​றவர்​களுக்​கும் ஓய்​வூ​தி​யம், குடும்ப ஓய்​வூ​தி​யம் பணிக்​கொடை வழங்க வேண்​டும்.


இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. பட்​ட​தாரி ஆசிரியர் கழகத்​தின் கவுரவ தலை​வர் அ.மாய​வன், தொழிற்​கல்வி ஆசிரியர் கழக மாநிலத்​தலை​வர் செ.​நா.ஜ​னார்த்​தனன், முது​நிலை பட்​ட​தாரி ஆசிரியர் கழக மாநிலத்​தலை​வர் எஸ்​.பிர​பாகரன், பொதுச்​செயலாளர் பொ.அன்​பழகன், தமிழ்​நாடு ஆரம்​பப்​பள்ளி ஆசிரியர் கூட்​டணி மாநில பொதுச்​செய​லா​ளர் ச.ம​யில் ஆகியோர் அளித்த அறிக்​கையில், “நிதி பற்​றாக்​குறை​யால் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்​த​வில்லை என்று வாதம் ஏற்​றுக்​கொள்ள முடி​யாதது” என்​றனர்.


நேற்​றைய கருத்​துகேட்பு கூட்​டத்​தில் பங்​கேற்ற அனைத்து அரசு ஊழியர்- ஆசிரியர் சங்​கங்​களின் நிர்​வாகி​களும் மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை நடை​முறைப்​படுத்​த வேண்​டும்​ என்​று வலி​யுறுத்​தினர்​.


No comments:

Post a Comment

Post Top Ad