மாநிலக் கல்விக் கொள்கை 2025 - தொடர்பான விமர்சனங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம் - Asiriyar.Net

Wednesday, August 13, 2025

மாநிலக் கல்விக் கொள்கை 2025 - தொடர்பான விமர்சனங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

 



மாநிலக் கல்விக் கொள்கை தொடர்​பான பல்​வேறு விமர்​சனங்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை விளக்​கம் அளித்துள்ளது. மாநிலக் கல்விக் கொள்கை வடிவ​மைப்பு குழு​வில் இடம் பெற்​றிருந்த பேராசிரியர் ஜவகர் நேசன், பின்பு கருத்து வேறு​பாடு​களால் அதிலிருந்து வில​கி​னார். தற்​போது வெளி​யாகி​யுள்ள மாநிலக் கல்விக் கொள்கை தொடர்​பாக பல்​வேறு குற்றச்சாட்​டு​களை முன்​வைத்து அறிக்கை வெளி​யிட்​டிருந்​தார்.


அதற்கு விளக்​கம் அளித்து பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு விவரம்: மாநிலக் கல்விக் கொள்​கை- 2025 கல்வியாளர்​கள், பாடத்​திட்ட நிபுணர்​கள், பள்ளி நிர்​வாகி​கள் மற்​றும் கல்​வித்​துறை அதி​காரி​கள் ஆகியோர் கொண்ட நிபுணர் குழு​வால் தயாரிக்​கப்​பட்​டது. இதில் ஆசிரியர்​கள், கல்​வி​யாளர்​கள், குழந்​தைகள் நல அமைப்​பு​கள், பெற்​றோர் உட்பட பல்வேறு தரப்​பிடம் இருந்து ஆலோ​சனை​களும் பெறப்​பட்​டன. இது அவ்​வப்​போது மதிப்​பாய்வு செய்​யப்​பட்டு தேவைக்​கேற்ப மாறுதல்களை மேற்​கொள்​ள​வும் அனு​ம​திக்​கிறது.


இந்த கொள்கை தமிழகத்​தில் இரு​மொழிக் கொள்​கை​யைத் தொடர்ந்து செயல்​படுத்​து​வதை வலி​யுறுத்​துகிறது. உயர்​கல்வி சேர்க்கைக்​கான நுழைவுத் தேர்​வு​களை எதிர்க்​கிறது. தமிழ் கலாச்​சா​ரத்தை பாது​காப்​ப​தை​யும், தமிழ் மொழியை மேம்படுத்துவதை​யும், அதே​நேரத்​தில் உலகளா​விய ஈடு​பாட்​டுக்கு மாணவர்​களை தயார்​படுத்​து​வதை​யும் நோக்​க​மாகக் கொண்டு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.


மாநிலக் கல்விக் கொள்கை பள்ளி மேலாண்​மைக் குழுக்​கள் மற்​றும் உள்​ளூர் முடி​வெடுத்​தலை வலுப்​படுத்​துகிறது. தேசிய கல்விக் கொள்​கை​யின் மும்​மொழிக் கொள்​கை, நுழைவுத் தேர்​வு​கள் ஆகிய​வற்றை மாநிலக் கல்விக் கொள்கை வெளிப்​படையாக மறுக்​கிறது. 10+2 அமைப்​பை​யும் தொடர்ந்து தக்க வைத்​துள்​ளது. கல்வி மீண்​டும் மாநிலப் பட்​டியலுக்கு மாற்​றப்பட வேண்​டுமென அறை​கூவல் விடுக்​கிறது. தனி​யார்​மய​மாதலுக்கு எதி​ரானது.


அதே​போல், மாநில கல்விக் கொள்​கை​யில் எந்த ஒரு பகு​தி​யும் சிறு​பான்​மை​யினர் பாது​காப்பை குறைக்​க​வில்​லை. அனைத்து வாய்ப்பு மறுக்​கப்​பட்ட குழு​வினர்​களிடம் உள்ள கற்​றல் இடைவெளி​களை கண்​டறிந்​து, அவர்​களுக்கு கல்வி உதவி மற்​றும் குறைதீர் கற்​றலை வழங்க கொள்கை உறுதி செய்​கிறது.


இது தமிழகத்​தின் கல்​வித் தனித்​து​வத்​தைப் பாது​காத்து உலகளா​விய சவால்​களுக்கு கற்​போரைத் தயார் செய்​கிறது. அதனுடன் மாநில சுயாட்​சியை நிலைநிறுத்​தி, சமூக நீதியை வலுப்​படுத்​தி, நலத்​திட்​டங்​களை மேம்​படுத்​துகிறது. இவ்​வாறு அ​தில்​ கூறப்பட்டுள்​ளது.


No comments:

Post a Comment

Post Top Ad