தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் (டிட்டோஜாக்) உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று தொடக்கக்கல்வி இயக்குநரின் அழைப்பை ஏற்று சென்னை பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் (DPI) உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு வருகைபுரிந்து பேச்சுவார்த்தை நடந்துமுடிந்தது.
தொடக்கக்கல்வி இயக்குநர் திரு கண்ணப்பன், பள்ளிக்கல்வி இயக்குநர் திரு அறிவொளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி 13.10.2023 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டிட்டோஜாக் சார்பில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே போராட்டம் வாபஸ். திட்டமிட்டபடி வரும் 13 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்
TETOJAC அறிவிப்பு