இதை செய்யும் வரை போராட்டம் தொடரும் - ஆசிரியர்கள் அதிரடி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 4, 2023

இதை செய்யும் வரை போராட்டம் தொடரும் - ஆசிரியர்கள் அதிரடி

 



சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டு போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.


சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கோரிக்கைகளை முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் முடிவை அறிவிக்கிறோம் என அமைச்சர் தெரிவித்து இருந்தார்.


"பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலை சம ஊதியம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். ஆசிரியர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து பேசிய அவர்கள், "ஓராண்டுக்கு பிறகு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கையை ஏற்று கொண்டதற்கு அரசுக்கு நன்றி. முழு நேர பணி வழங்கப்பட வேண்டும்," என்று தெரிவித்தனர்.


Post Top Ad