இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவலுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் - Asiriyar.Net

Thursday, July 2, 2026

இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவலுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்




ஒரு ஒன்றியத்திலும் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருக்கும் போது கட்டாயப்படுத்தி பணிநிரவல் செய்யக்கூடாது என தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

விசாரணையில் அரசு தரப்பில் கலந்தாய்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதனை தடை செய்ய முடியாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.


வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு ஜி.சங்கரன் மாநிலங்கள் முழுவதும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளது, அதனால் கட்டாயப்படுத்தி பணிநிரவல் செய்ய கூடாது என வாதிட்டத்தின் அடிப்படையில், கலந்தாய்வு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இதில் _ஆசிரியர்கள் இடங்களை தேர்வு செய்து கொள்ளலாம்_ ஆனால் அவர்களுக்கு பணி நிரவல் ஆணை வழங்கக்கூடாது.


செப்டம்பர் மாதம் மீண்டும் 01.08.2026 மாணவர்கள் சேர்க்கையின் அடிப்படையில் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, தற்போது நடைபெறும் சிறப்பு தகுதி தேர்வு முடிந்த பின்னர் பதவி உயர்வு வழங்கி, அதன் பின் பணி நிரவல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் மற்றும் இடைக்காலத்தடை பிறப்பித்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad