மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விடுவியுங்கள் - ஆசிரியர்கள் கலெக்டரிடம் வலியுறுத்தல் - Asiriyar.Net

Friday, July 17, 2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விடுவியுங்கள் - ஆசிரியர்கள் கலெக்டரிடம் வலியுறுத்தல்




மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விடுவியுங்கள் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கலெக்டரிடம் வலியுறுத்தல்

துாத்துக்குடி, ஜூலை 17-

மக்கள் தொகை கணக் கெடுப்பு பணியில் இருந்து மாணவர்கள் நலன் கருதி முதுநிலை பட்டதாரி ஆசிரி யர்களை விடுவிக்க வேண்டும் என்று சுலெக்டருக்கு தமிழ் நாடு முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் கழகம் சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இது குறித்து மாநில துணைத் தலைவர் முஜிபுர் ஆலோசனை யின் பேரில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாரிசெல்வம், அமைப்பு செயலாளர் பன்னீர் செல் வம், செய்தி தொடர்பு செயலாளர் பாரதிராஜா ஆகியோர் மாவட்ட கிளை சார்பில் துரத்துக் குடி கலெக்டர் விஷு மகாஜனுக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியி ருப்பதாவது;

இந்திய அரசின் மிக முக்கிய நிர்வாகப் பணி களில் ஒன்றான 'மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகளில், துாத்துக்குடி மாவட்டத் தில் பிளஸ் மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக் குப் பாடம் நடத்தும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை (Pool Gondnute Traches) Censuய Enumerator' மற்றும் Cerons Supervisor' ஆகிய பணிகளில் நியமிப்பதில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண் டும்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்க ளுக்கு சுணிதம், இயற் பியல், வேதியியல், உயிரியல், கணினி அறி வியல், வரலாறு, பொரு வியல், வணிகவியல் உள்ளிட்ட முதன்மைப் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் அனைவ ரும் அரசு பொதுத்தேர் வுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad