தமிழ்நாடு தொடக்கக் கல்வி - பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்ய TNSED பெற்றோர் செயலியில் (Parent App) மின்னணு கண்காணிப்பு அமைப்பு உருவாக்குதல் முன் மொழிவு பெறப்பட்டது - சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொருட்டு அனுப்புதல் - தொடர்பாக
பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நியமனங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தும் நோக்கில் TNSED பெற்றோர் செயலியில் (Parent App) முன்மொழியப்பட்டுள்ள மின்னணு கண்காணிப்பு அமைப்பு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படும் ஆசிரியர்களின் விவரங்களை எளிமையாகக் கண்காணிக்கவும்,
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், பயனுள்ள கண்காணிப்பை மேற்கொள்ளவும் உதவும், சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதி செய்திட மாவட்ட, வட்டார ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுறுத்திட பார்வை (2)-இல் காணும் தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் சங்க உறுப்பினர் செயலரின் கடித நகல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொருட்டு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்படுகிறது.

No comments:
Post a Comment