சிபிஎஸ்இ மும்மொழி கொள்கை விதிகள் வெளியீடு - Asiriyar.Net

Monday, June 29, 2026

சிபிஎஸ்இ மும்மொழி கொள்கை விதிகள் வெளியீடு

மும்மொழிக்கொள்கை தொடர்பான வழிகாட்டுதல்களை சி.பி.எஸ்.சி. இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தற்போது சிபிஎஸ்சி முறையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புதிய மொழிக்கொள்கையை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது 7,8 மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பிற்கு செல்லும் பொழுது 3-வது மொழியில் வாரியத்தேர்வு எழுத வேண்டியது இல்லை.

7,8,9-ம் வகுப்புகளில் ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் படித்து வரும் மாணவர்கள் அவற்றை தொடலாம்; ஒரு இந்திய தாய் மொழியை கூடுதலாக கற்க வேண்டும்.

2026-2027-ம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கண்டிப்பாக படிக்க வேண்டும். 

அதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்- சிபிஎஸ்இ.

No comments:

Post a Comment

Post Top Ad