அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த த.வெ.க எம்.எல்.ஏ - Asiriyar.Net

Thursday, June 11, 2026

அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த த.வெ.க எம்.எல்.ஏ




அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பார்களா என்ற கேள்வி தமிழகத்தில் பல ஆண்டுகளாக ஒளித்துக்கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு முன்னோட்டமாக த.வெ.க எம்.எல்.ஏ தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தனி தொகுதியில், இம்முறை த.வெ.க.,வை சேர்ந்த இளங்கோவன் வெற்றி பெற்றார். திருப்புவனம் அருகே, அகரம் கிராமத்தை சேர்ந்த இவருக்கு, ஜெயலட்சுமி என்ற மனைவியும் தேவமித்ரா என்ற மகளும் உள்ளனர். தேவமித்ரா, அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு 5-ம் வகுப்பு வரை படித்தார்.

இதனைத் தொடர்ந்து 6-ம் வகுப்பில் மகளை சேர்ப்பதற்காக திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று எம்.எல்.ஏ., இளங்கோவன், மனைவியுடன் சென்று, மகளை 6-ம் வகுப்பில் சேர்த்துவிட்டார். தலைமை ஆசிரியை இந்திராவிடம், பள்ளிக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்தார். எம் எல் ஏ இளங்கோவன் அப்பள்ளியின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad