Salary Account Insurance - விபத்தில் மரணம் அடைந்தவர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது! - Asiriyar.Net

Friday, October 24, 2025

Salary Account Insurance - விபத்தில் மரணம் அடைந்தவர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது!

 




Salary Account Insurance 

கடலூர் செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவருடைய மகன் கஜா என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் சேர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை உளுந்தூர்பேட்டையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அரியலூர் அருகே வாகன விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


காவலர் கஜா பாரத ஸ்டேட் வங்கியில் போலீஸ் சேலரி பேக்கேஜ் அக்கவுண்ட் வைத்திருந்தார்.அவ்வாறு வைத்திருக்கும் காவலர்களுக்கு ,விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்தால் ரூ. 1 கோடி இன்சூரன்ஸ் தொகை அவரது குடும்பத்தாருக்கு வழங்கி வருகிறார்கள்.


இந்நிலையில் உயிரிழந்த கஜாவின் தந்தை பன்னீர்செல்வம், கஜாவின் மனைவி பிரவீனா (வயது 28), மகன் அதியன் (2) ஆகியோரிடம் ரூ. 1 கோடிக்கான காசோலையை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியின் போது பாரத ஸ்டேட் வங்கி வங்கியின் மண்டல மேலாளர் நட்ராஜ், தலைமை மேலாளர் பரணிதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment

Post Top Ad