மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்
ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக ( Online ) 23.10.2025 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.மு.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது . அக்கூட்டத்தில் ஜாக்டோ - ஜியோ சார்பாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
அரசு ஊழியர் , ஆசிரியர் , அரசுப்பணியாளர்கள் கோரிக்கைகள் மற்றும் தமிழ்நாடு அரசின் நிலைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது . பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பாக 08.10.2025 அன்று ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் தொடர் போராட்ட இயக்க நடவடிக்கைகள் முடிவெடுக்கப்பட்டது .
ஆயினும் இயற்கை சீற்றத்தின் காரணத்தால் நாம் எடுத்துள்ள கீழ்கண்ட முடிவுகளை தொய்வின்றி , வெற்றிகரமாக நடத்திட அனைத்து அமைப்புகளும் தங்களது மாநில மையத்தின் சார்பாக அரசு ஊழியர் , ஆசிரியர் , அரசுப்பணியாளர்களிடம் கொண்டு சென்று மிக எழுச்சியோடு பங்கேற்க வைப்பது என முடிவெடுக்கப்பட்டது .
Click Here to Download - 23.10.2025 JACTTO GEO கூட்ட முடிவுகள் - Pdf

No comments:
Post a Comment