சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 24, 25 ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், டெட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு முறையான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், அடுத்த 2026 ஆம் ஆண்டு 3 முறை சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டது.
”உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற வேண்டி உள்ளனர். மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் பதவி உயர்வும் பாதிக்கப்படும். தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு, மாநகராட்சி, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் இதுநாள் வரை தகுதி பெறாதவர்கள்.
No comments:
Post a Comment