அரசு கல்லூரிகளில் பகுதி நேரமாக ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் - Application - Govt Letter - Asiriyar.Net

Saturday, June 8, 2024

அரசு கல்லூரிகளில் பகுதி நேரமாக ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் - Application - Govt Letter

 



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை & பண்பாட்டுத் துறை சார்பில் பகுதி நேரமாக கலைகள் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம்!


கல்லூரி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ / மாணவியரில் பகுதி நேரமாக கலைகள் பயில உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் வாரம் இரண்டு நாட்கள் பகுதி நேர கலை பயிற்சி அளிப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


செவ்வியல் கலை , கிராமியக்கலை , கவின் கலை ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு கலையில் முதற்கட்டமாக 100 கல்லூரிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் . இக்கலை பயிற்சி அளித்திட தொகுப்பூதியத்தில் கலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் . குரலிசை , தேவாரம் , மிருதங்கம் , பரதநாட்டியம் , ஓவியம் , நவீன சிற்பம் , கைவினை , கிராமிய பாடல் , கரகம் , தப்பாட்டம் , ஒயிலாட்டம் , சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை வடிவங்களில் 100 பகுதி நேர ஆசிரியர்கள் இரண்டு மணி நேர வகுப்புகளுக்கு ரூ .750 / -வீதம் மதிப்பூதியத்தில் ஆண்டுக்கு 80 வகுப்புகள் மேற்கொள்வதற்கு தொகுப்பூதியதில் நியமனம் செய்யப்பட உள்ளனர். 


பகுதி நேர கலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ள கல்லூரிகள் . அக்கல்லூரி தேர்வு செய்துள்ள கலை மற்றும் பயிற்சி நடைபெற உள்ள நாள் மற்றும் நேரம் , விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி போன்ற விவரங்கள் கலை பண்பாட்டுத் துறையின் இணையத்தளத்தில் www.artandculture.tn.gov.in பதிவிடப்பட்டுள்ளது . கலை இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பகுதி நேரப்பணிக்கு 25.06.2024 அன்றுக்குள் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் . 


Click Here to Download - Temporary Teachers selection Order in Arts & Science Colleges - Govt Letter - Pdf



Post Top Ad