விபத்து - தலைமை ஆசிரியை உயிரிழப்பு - Asiriyar.Net

Thursday, June 20, 2024

விபத்து - தலைமை ஆசிரியை உயிரிழப்பு

 




தலைமை ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரை திருநகரில் வசித்து வருபவர் ரமேஷ், விருதுநகர் மாவட்ட வேளாண்மை விற்பனை பிரிவு இணை இயக்குனர்.


இவரது மனைவி மனைவி ஜெனுவா இவாஞ்சலின், மதுரை அமெரிக்கன் கல்லுாரி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை. இவர் அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் தவமணி கிறிஸ்டோபரின் தங்கை ஆவர்.


நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூருக்கு குடும்பத்துடன் சென்றனர். நேற்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.


மதியம் 2:30 மணிக்கு திருச்சுழி அருகே கமுதி விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, காரின் முன் டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஜெனோவா இவாஞ்சலின் பலியானார்.


இவருடன் காரில் பயணித்த கணவர் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து 3 பேரை மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பலியான ஜெனோவா இவாஞ்சலின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது


தலைமை ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad