தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அரசியல் கட்சிக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
குருபாக்கியம் துவக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் திருமதி வே. விஜயலட்சுமி என்பாராகிய தாங்கள் தேர்தல் நன்னடத்தை விதியை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆணையின் படி மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்க கல்வி ) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 1317 / ஆ2 / 2026 நாள் 16.04.2026, வாசுதேவநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை ந.க. எண் 616 / அ4/ 2026 நாள் 16.04.2026 இன் படி இன்று 16.04.2026 முதல் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.
இவ்வாணை பெற்ற உடன் தாங்கள் உரிய விளக்கத்தினை தகுந்த ஆதாரத்துடன் நிர்வாகத்திற்கு அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.

No comments:
Post a Comment