தேர்தல் பணிக்கு கிளம்பிட்டீங்க போல... இதெல்லாம் எடுத்தாச்சானு ஒரு முறை பார்த்துக்கோங்க - Asiriyar.Net

Wednesday, April 22, 2026

தேர்தல் பணிக்கு கிளம்பிட்டீங்க போல... இதெல்லாம் எடுத்தாச்சானு ஒரு முறை பார்த்துக்கோங்க

 



தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மறவாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விபரம் :


1. மாற்று உடைகள் ( தேவையானவை )

2. தேங்காய் எண்ணெய்

3. பவுடர், சீப்பு , பொட்டு, ப்ரஷ் , பேஸ்ட்

4. மாத்திரைகள் , இன்ஹேலர்கள்

5. விக்ஸ், தலைவலி தைலம்


6. பிஸ்கட் பாக்கெட்

7. இரண்டு ஸ்கெட்ச்

8. Buds - 2 - ( மை வைக்க )

9. டார்ச் லைட்

10. பெட்ஷீட் / துண்டு


11. மூக்கு கண்ணாடி (தேவை உள்ளவர்கள்)

12. பேனா சிவப்பு & நீலம்

13. Ex. box & Table fan ( வாகனத்தில் செல்பவர்கள் ) ( Booth ல போதிய fan வசதி இருக்காது )

14. தேவையான குடிநீர் ( வேறு குடிநீர் ஒத்துக் கொள்ளாது என்பவர்கள் )

15. EDC - படிவம் original. (ஒட்டு போட + Photo )


16. Voter ID / ஆதார் Card.

17. 1 முதல் 500 வரை எண்கள் கொண்ட பேப்பர் - 2 ( P1 க்கு மட்டும் )

18. முந்திரி , பாதாம் பருப்பு + திராட்சை, கடலை மிட்டாய் / நொறுக்கு தீனி ( சாப்பாடு சரி இல்லனா ...)

19. Cell phone + Headphone + Charger

20. flask ( தேவை உள்ளவர்கள்)

21. மிக முக்கியமானது கண் கண்ணாடி


22. இரவு உணவு (சப்பாத்தி/புளியோதரை)

23. ஸ்கெட்ச் & மினி டைரி

24. வேஸ்ட் துணி & news papers

25. ⁠double side tape


26. ⁠கத்திரிக்கோல் (scissor)

27. ⁠Bit card board (அரக்கு சீல் வைக்க)


28. மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக, பாதுகாப்பான பயணம் தேவை. முன்கூட்டியே திட்டமிட்டு பேருந்தில் பயணிப்பவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.

29. அதுபோல் தேர்தல் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பயணத் தேவைக்கு பேருந்து வசதி செய்யப்பட்டு இருக்கும்.அதன் நேரம், காலம் அறிந்து அதற்கு ஏற்ப பேருந்து ஏறும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

30. இருசக்கர வாகனங்களில் செல்லலாம் என்று நினைப்பவர்கள் உரிய தலைக்கவசத்தையும் பயன்படுத்த வேண்டும்.

31. வேகக் கட்டுப்பாடு நாம் ஓட்டும் வாகனத்தில் மட்டுமல்ல,நம் மனதிற்கும் அவசியம்.

32. நண்பர்கள் கிடைத்து விட்டார்கள் என்பதற்காக சாலையை அடைத்துக் கொண்டு செல்வதையும் வேகமாக பறப்பதையும் தவிர்க்க வேண்டும்.

33. எல்லா வற்றிற்கும் மேலாக, தேர்தல் பணி நம் தேசத்திற்கான பணி என்பதால், சிறப்பாகப் பணிபுரிந்து இல்லம் திரும்ப வேண்டும்.

34. நமக்காக வீட்டில் உள்ளவர்களும் காத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைப்போடு, எங்கு பணிக்கு சென்றாலும் அவர்களின் நினைப்போடும், பாதுகாப்பு உணர்வை மனதில் கொண்டும் , சிறப்பாக சென்று வருக.


No comments:

Post a Comment

Post Top Ad