16.10.2023 முதல் Attendance தவிர Appல் வேறு எந்த பணிகளை செய்ய மாட்டோம் - TETOJAC தீர்மானம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, October 8, 2023

16.10.2023 முதல் Attendance தவிர Appல் வேறு எந்த பணிகளை செய்ய மாட்டோம் - TETOJAC தீர்மானம்

 

வருகிற 16.10.23 முதல் Teacher, student attendance தவிர வேறு எந்த ஆன்லைன், app பதிவிடுதல் போன்ற பணிகளை செய்ய மாட்டோம் என டிட்டோஜாக் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.


எண்ணும் , எழுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிடவேண்டும்

 ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு , மாணவர்களின் கல்வித்தரத்தினைப் பாதிக்கும் எண்ணும் , எழுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும். எண்ணும் , எழுத்தும் திட்டத்தில் செல்போன் செயலி மூலம் தேர்வு நடத்துவதைப் பெற்றோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 


செல்போன் மூலம் தேர்வு நடத்துவதிலும் , செல்போன் மூலம் மாணவர் வளரறி மதிப்பீட்டுப் பணிகளை ஒவ்வொரு வாரமும் பதிவேற்றம் செய்வதிலும் , கிராமப்புறங்களில் NET WORK இல்லாத நிலையில் ஆசிரியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 


ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாக இருப்பதோடு , ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமைகளை உருவாக்கி கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் ONLINE பதிவேற்றப்பணிகளில் இருந்தும் , EMIS , TNSED APP மூலம் நடைபெறும் பதிவேற்றப் பணிகளில் இருந்தும் 16.10.2023 முதல் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக விடுவித்துக்கொள்வது என டிட்டோஜேக் பேரமைப்பு ஒருமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.


 மாணவர் வருகை , ஆசிரியர் வருகைப் பதிவேற்றம் தவிர பிற எவ்வித விபரங்களையும் செல்போன் மூலம் பதிவேற்றும் பணிகளை 16.10.2023 முதல் ஆசிரியர் மேற்கொள்வதில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்கிறார்கள் என்ற விபரத்தினை , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் , மதிப்புமிகு . பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களுக்கும் , மதிப்புமிகு . பள்ளிக்கல்வி இயக்குநர் , மதிப்புமிகு . தொடக்கக்கல்வி இயக்குநர் , மதிப்புமிகு . கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கக இயக்குநர் ஆகியோருக்கும் டிட்டேஜேக் பேரமைப்பின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.





Post Top Ad