தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு - பள்ளிக் கல்வித்துறை! - Asiriyar.Net

Tuesday, April 20, 2021

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு - பள்ளிக் கல்வித்துறை!

 








தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும். மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்கள் தேர்வு எழுதலாம். விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக தேர்ச்சி செய்யப்படுவர் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.



தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தேர்வு ஒன்றை பள்ளி அளவில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல். தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப் பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும் !



பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் என்ற விருப்பமுள்ள மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம் என்றும் இந்தத் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad