பள்ளிகளைத் திறக்க அரசு எந்நேரமும் தயாராக இருக்கிறது - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Wednesday, December 9, 2020

பள்ளிகளைத் திறக்க அரசு எந்நேரமும் தயாராக இருக்கிறது - அமைச்சர் செங்கோட்டையன்

 






பள்ளிகளைத் திறக்க அரசு எந்த நேரமும் தயாராக இருப்பதாகவும் பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.




காஞ்சிபுரம் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.




முன்னதாக ஸ்ரீபெரும்பத்தூர் அருகே காரை பகுதியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு இருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டது. அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad