பள்ளியில் தண்டனை தவிர்த்து மாணவர்களைக் கையாளும் மாற்று வழிகள் - Asiriyar.Net

Saturday, August 15, 2026

பள்ளியில் தண்டனை தவிர்த்து மாணவர்களைக் கையாளும் மாற்று வழிகள்




1. *தனிமையில் பேசுதல்* : தவறு செய்யும் மாணவரை வகுப்பிற்கு வெளியே அல்லது மற்றவர்கள் இல்லாத இடத்தில் தனியாக அழைத்து, அன்பாகவும் அதே சமயம் கண்டிப்புடனும் பேச வேண்டும்.

2. *பொறுப்புகளை வழங்குதல்:* வகுப்பறைத் தலைவர் (Class Monitor), கரும்பலகையைத் தூய்மை செய்பவர் அல்லது நோட்டுப் புத்தகங்களைச் சேகரிக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படையுங்கள். பொறுப்புகள் அவர்களைத் தானாகவே ஒழுங்குபடுத்தும்.

3. *விளைவுகளைப் புரிய வைத்தல் (Logical Consequences):* வீட்டுப்பாடம் எழுதவில்லை எனில், விளையாடும் நேரத்தைக் குறைத்து அந்த நேரத்தில் எழுத வைக்கலாம். வகுப்பறைச் சுவரிலோ அல்லது பெஞ்சிலோ கிறுக்கினால், அவர்களையே அதைத் தூய்மை செய்ய வைக்க வேண்டும்.சக மாணவனின் பொருளைச் சேதப்படுத்தினால், அதற்குப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் (அவரது பெற்றோரிடம் கூறி மாற்றித் தரச் செய்தல்).

4. *பாராட்டுதல் (Positive Reinforcement):* அவர்கள் செய்யும் சிறிய நல்ல விஷயங்களைக் கூட வகுப்பறையில் பாராட்டுங்கள். அது மற்ற தவறான நடத்தைகளைக் குறைக்கும்.

5. *ஆலோசனை (Counseling):* மாணவனின் தொடர் அடம் அல்லது தவறான நடத்தைக்கு குடும்பச் சூழ்நிலை காரணமாக இருக்கலாம். அதை அறிந்து பள்ளி ஆலோசகர் அல்லது பெற்றோருடன் இணைந்து தீர்வு காண வேண்டும்.

6. *காரணத்தைக் கண்டறிதல் (Root Cause Analysis):* திடீரென ஒரு மாணவனின் மதிப்பெண் குறைந்தாலோ அல்லது நடத்தை மாறினாலோ அதற்குப் பின்னால் காதல் வயப்படுதல், குடும்பப் பிரச்சினை, அல்லது அலைபேசி (Mobile Phone) அடிமைத்தனம் போன்ற காரணங்கள் இருக்கலாம். அதை அறிந்து உதவ வேண்டும்.

7. *வழிகாட்டியாக மாறுதல் (Mentoring):* "நீ பெரிய ஆளாக வர வேண்டியவன், இந்தத் தவறு உன் லட்சியத்தைப் பாதிக்கும்" என்று அவர்களின் எதிர்காலத்தையும், கனவுகளையும் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த வேண்டும்.

8. *எல்லைகளை வகுத்தல் (Strict Boundaries):* அன்பாகப் பேசுவது என்பது எல்லாவற்றையும் அனுமதிப்பது அல்ல. வகுப்பறையின் விதிகளை முன்கூட்டியே தெளிவாகக் கூறி, அதை மீறினால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும் அல்லது பெற்றோரிடம் கூறப்படும் போன்ற தார்மீகக் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

9. வகுப்பில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால், அவரது *அமரும் இடத்தை (Seating Arrangement) மாற்றி,* ஆசிரியருக்கு அருகில் அமர வைக்க வேண்டும். 

10. *தற்காலிக உரிமைப் பறிப்பு (Loss of Privileges)* விளையாட்டுப் பாடவேளை (P.E. Period), பள்ளிச் சுற்றுலா (School Trip) அல்லது கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.

11. சமூக சேவை மற்றும் *சுயசிந்தனைக் கட்டுரைகள்* (Reflective Assignments & Service) "நான் செய்த தவறு என்ன? இதனால் பிறருக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? இனி நான் எப்படி நடந்துகொள்வேன்?" என்ற தலைப்பில் ஒரு பக்க சுயசிந்தனைக் கட்டுரை (Reflection Essay) எழுதச் சொல்லலாம். பள்ளி நூலகப் புத்தகங்களை அடுக்குவது, பள்ளித் தோட்டத்தைப் பராமரிப்பது போன்ற சிறிய சமூகப் பணிகளில் (School Service) ஈடுபட வைக்கலாம். தொடர்ந்து பொய் சொல்லும் மாணவரிடம், "உண்மை பேசுவதன் முக்கியத்துவம்" அல்லது "ஒரு பொய் எப்படிப் பல சிக்கல்களை உருவாக்குகிறது" என்ற தலைப்பில் ஒரு பக்கக் கட்டுரை எழுதி வரச் சொல்லலாம். இது அவர்களைச் சிந்திக்க வைக்கும். உண்மையைச் சொன்னால் சலுகை கிடைக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும்."உண்மையைச் சொன்னதற்காகப் பாராட்டுகிறேன், ஆனால் இந்தத் தவறை அடுத்த முறை செய்யக் கூடாது" என்ற அணுகுமுறை, அவர்களைப் பொய் சொல்லும் பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுவிக்கும்

12. தனிமைப் பேச்சு மற்றும் நடத்தை ஒப்பந்தம் (Private Counseling & Behavior Contract) மாணவருடன் தனியாகப் பேசி, ஒரு ' *நடத்தை ஒப்பந்தம்' (Behavior Contract)* போடலாம். "அடுத்த இரண்டு வாரங்களுக்கு வகுப்பில் கவனச்சிதறல் ஏற்படுத்த மாட்டேன்" என அவரிடமே உறுதிமொழி வாங்கி, அதில் அவரது கையெழுத்தைப் பெறலாம். ஒப்பந்தத்தை மீறினால் என்ன விளைவைச் சந்திக்க நேரிடும் (பெற்றோரை அழைப்பது போன்ற முடிவு) என்பதையும் முன்கூட்டியே தெளிவுபடுத்திவிட வேண்டும்.

13. தாமதமாக வரும் மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிற்க வைக்கக் கூடாது. அது அவர்களின் கல்வியைப் பாதிக்கும். அதற்குப் பதிலாக, அவர்கள் *தவறவிட்ட பாடப் பகுதிகளை, இடைவேளை (Intermission) அல்லது மதிய உணவு நேரத்தின் கடைசி 10 நிமிடங்களில்* அவர்களை வகுப்பறையிலேயே அமர வைத்து *எழுதச் செய்ய வேண்டும்*


No comments:

Post a Comment

Post Top Ad