ஆசிரியர்களை கற்பித்தல் பணி தவிர்த்து அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது - இணை இயக்குநரின் அறிவுறுத்தலை சுட்டிக்காட்டி திருவண்ணாமலை CEO உத்தரவு!
பள்ளிக் கல்வி - சென்னை-6, இணை இயக்குநர் (தொழிற்கல்வி) அவர்களின் இணையவழி கலந்தாய்வு கூட்டம் அறிவுரைகள் பெறப்பட்டமை - தொடர் நடவடிக்கையின் பொருட்டு மேற்கொள்ளுதல் - சார்பாக.
பார்வையில் காணும் இணையவழி கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுறுத்தியவாறு, கீழ்க்காணும் விவரங்கள் அனைத்து அரசு / நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு தெரிவிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (இடைநிலை / தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.
1) திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பள்ளி வேலை நேரத்தில் கற்பித்தல் பணிகள் தவிர்த்து பிற அலுவலக பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.
மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இணை இயக்குநர் (தொழிற்கல்வி) அறிவுறுத்தலை அனைத்து பள்ளித் சார்நிலை அலுவலர்களுக்கும் தெரிவிக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2) திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் EMIS பணிகளை தடையின்றி மேற்கொள்ள ஏதுவாக மாவட்ட EMIS ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு பள்ளியில் இளநிலை உதவியார் 1 ஆய்வக உதவியாளர் 1 ஆகிய இருவருக்கு EMIS சார்ந்த அனைத்து பதிவுகள் மேற்கொள்வது குறித்து ஒன்றிய அளவில் பயிற்சி தரப்படும்.
மேற்காணும் இரு பணியாளர்கள் அவர்களின் ஒன்றியத்தில் உள்ள மற்ற இளநிலை உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சிகளை தரவேண்டும் என இத்துடன் தெரிவிக்கப்படுகிறது.
Click Here to Download - No Office Duty For Teachers - CEO Proceedings - Pdf
No comments:
Post a Comment