தமிழகத்தில் காலிப்பணியிடங்களில் அரசியல் அழுத்தம காரணமாக விதிகளுக்கு புறம்பாக பணி மாறுதல் வழங்கியதற்கு ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் புரட்சித் தம்பி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் தற்போதுள்ள காலிப்பணியிடங்களில் அரசியல் அழுத்தம் என்று கூறி எம் லிஸ்ட் பெயரில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்விற்கு புறம்பாக மாறுதல் அளிப்பதை கண்டித்தும், தொடக்கக்கல்வி துறையில் 12 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லாததை கண்டித்தும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி சில ஆண்டுகளாக பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.
ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். கடந்த கல்வி ஆண்டின் இறுதியில் மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமையாசியர் பதவி காலியாக உள்ளது.
No comments:
Post a Comment