வாசிப்பு இயக்கம் - பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரித்தல் கதைகள் வரவேற்றல் - மாணவர்கள் படைப்புகளை ஆசிரியர்களின் EMIS login வழியே அனுப்பும் வழிமுறை - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல் கட்டமாக 53 புத்தகங்களும், இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்களும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டமாக 81 புத்தகங்கள் அரசுப்பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
• தற்போது நான்காம் கட்ட புத்தகங்கள் உருவாக்கப்பட உள்ளன. நான்காம் கட்ட புத்தகங்கள் அனைத்தும் மாணவர்களின் படைப்புகளாக கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
• அனைத்து வகை அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் படைப்புகளை ஆசிரியர்கள் EMIS Login வழியாக அனுப்பி வைக்கலாம்.
• தேர்வு செய்யப்படும் கதைகள் வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கேற்ப ஆசிரியர் குழுவால் வடிவமைக்கப்படும்.
• கதைகளைத் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ, திருத்தங்கள் செய்யவோ அரசு உயர் அலுவலர்களால் அமைக்கப்பட்ட சீராய்வுக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு.
• சீராய்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
No comments:
Post a Comment