தமிழக அரசு 55 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய பொறுப்புகளை வழங்கியுள்ளது. இந்த மாற்றங்கள் நிர்வாகத்தில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து, புதிய பொறுப்புகளை வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர், மதுரை, திருச்சி, ஈரோடு, செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த அதிரடி இடமாற்றம், அரசு நிர்வாகத்தில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியப் பணியிட மாற்றங்கள்:
திரு. இராஜேந்திர ரத்னூ, இ.ஆ.ப., (ஒன்றிய அரசுப் பணியிலிருந்து திரும்புபவர்) சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (CRRT) மற்றும் சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் (Chennai River Transformation Company Ltd.) ஆகியவற்றின் முதன்மைச் செயலாளர்/உறுப்பினர் செயலர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., (இயக்குநர், சுற்றுலா மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்) வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் அரசுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முனைவர் ச. விஜயகுமார், இ.ஆ.ப., (கூடுதல் தலைமைச் செயலாளர்/தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் (TNUIFSL)) கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர், நில சீர்திருத்தப் பணியிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
முனைவர் மா. வள்ளலார், இ.ஆ.ப., (ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை) சமூக சீர்திருத்தத் துறையின் அரசுச் செயலாளராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு எஸ். நாகராஜன், இ.ஆ.ப., (அரசுச் செயலாளர் (செலவினம்), நிதித் துறை) வணிக வரி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முனைவர் பொ. சங்கர், இ.ஆ.ப., (மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் இயக்குநர், பொது நூலகங்கள்) உயர்கல்வித் துறையின் அரசுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., (அரசுச் செயலாளர், உயர்கல்வித் துறை) மனிதவள மேலாண்மைத் துறையின் அரசுச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
திரு கோ. பிரகாஷ், இ.ஆ.ப., (அரசு முதன்மைச் செயலாளர், மனிதவள மேலாண்மைத் துறை) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மைச் செயலாளர்/உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் சு. பிரபாகர், இ.ஆ.ப., (உறுப்பினர் செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்) தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு (TN IAMP) மாற்றப்பட்டுள்ளார்.
திரு நா. வெங்கடேஷ், இ.ஆ.ப., (ஒன்றிய அரசுப் பணியிலிருந்து திரும்புபவர்) நிதித் துறையின் அரசு சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதர பணியிட மாற்றங்கள்:
திருமதி ஆர். லில்லி, இ.ஆ.ப., (ஆணையர், சமூக நலம்) போக்குவரத்துத் துறையின் அரசு சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு சு. கணேஷ், இ.ஆ.ப., (அரசு சிறப்புச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு சிறப்புச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
திரு வீர் பிரதாப் சிங், இ.ஆ.ப., (கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), இராமநாதபுரம் மாவட்டம்) பொதுத் துறையின் அரசு துணைச் செயலாளராக (மரபு) நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி கே.எம். சரயு, இ.ஆ.ப., (அரசு இணைச் செயலாளர் (மரபு), பொதுத் துறை) வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அரசு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி ஆர்.வி. ஷஜீவனா, இ.ஆ.ப., (அரசு கூடுதல் செயலாளர், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி ஸ்ரேயா பி. சிங், இ.ஆ.ப., (மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம்) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு ப. மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., (இயக்குநர், நில அளவை மற்றும் நிலவரித் திட்டம்) நகராட்சி நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
திரு சு. சிவராசு, இ.ஆ.ப., (இயக்குநர், நகராட்சி நிர்வாகம்) தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் (TNUIFSL) மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முனைவர் ஜெ. விஜயராணி, இ.ஆ.ப., (இணை ஆணையர் (கல்வி), பெருநகர சென்னை மாநகராட்சி) தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு தா. கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சித் தலைவர், திருப்பூர் மாவட்டம்) சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முனைவர் மா. சௌ. சங்கீதா, இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சித் தலைவர், மதுரை மாவட்டம்) சமூக நல இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு மா. பிரதீப் குமார், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சித் தலைவர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்) பேரூராட்சிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு ராஜ கோபால் சுன்கரா, இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சித் தலைவர், ஈரோடு மாவட்டம்) நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு ச. அருண்ராஜ், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சித் தலைவர், செங்கல்பட்டு மாவட்டம்) பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ், இ.ஆ.ப., (முன்னாள் ஆணையர், ஈரோடு மாநகராட்சி) திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு வெ. சரவணன், இ.ஆ.ப., (ஆணையர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி தி. சினேகா, இ.ஆ.ப., (செயல் இயக்குநர், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., (வட்டார துணை ஆணையர் (மத்தி), பெருநகர சென்னை மாநகராட்சி) மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., (ஆணையர், திருநெல்வேலி மாநகராட்சி) விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு ச. கந்தசாமி, இ.ஆ.ப., (ஆணையர், ஆவடி மாநகராட்சி) ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி துர்கா மூர்த்தி, இ.ஆ.ப., (மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம், சேலம்) நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி கா. பொற்கொடி, இ.ஆ.ப., (இணை மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்) சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சித் தலைவர், சிவகங்கை மாவட்டம்) தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் மற்றும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் தலைமை இயக்க அலுவலர் மற்றும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு எம்.பி. அமித், இ.ஆ.ப., (வட்டார துணை ஆணையர் (தெற்கு), பெருநகர சென்னை மாநகராட்சி) திருப்பூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு எச்.ஆர். கௌஷிக், இ.ஆ.ப., (கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), நீலகிரி மாவட்டம்) பெருநகர சென்னை மாநகராட்சியின் வட்டார துணை ஆணையராக (மத்தி) நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் மோனிகா ராணா, இ.ஆ.ப., (கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மதுரை மாவட்டம்) திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு வி. மதுபாலன், இ.ஆ.ப., (ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு பானோத் ம்ருகேந்தர் லால், இ.ஆ.ப., (இணை ஆணையர் (மாநில வரிகள்), வணிக வரி, கோயம்புத்தூர்) தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி ரா. சரண்யா, இ.ஆ.ப., (கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), கடலூர் மாவட்டம்) ஆவடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செல்வி ர. அனாமிகா, இ.ஆ.ப., (கூடுதல் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி) நகராட்சி நிர்வாகத்தின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு லலித் ஆதித்ய நீலம், இ.ஆ.ப., (இணை ஆணையர், நகராட்சி நிர்வாகம்) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியின் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு அஃதாப் ரசூல், இ.ஆ.ப., (கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), புதுக்கோட்டை மாவட்டம்) பெருநகர சென்னை மாநகராட்சியின் வட்டார துணை ஆணையராக (தெற்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., (ஆணையர், நாகர்கோவில் மாநகராட்சி) ஓசூர் மாநகராட்சி ஆணையராகவும், தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலராகவும் கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு அர்பித் ஜெயின், இ.ஆ.ப., (கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), ஈரோடு மாவட்டம்) ஈரோடு மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி ர.அ. பிரியங்கா, இ.ஆ.ப., (சார் ஆட்சியர், ஓசூர்) கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செல்வி பல்லவி வர்மா, இ.ஆ.ப., (சார் ஆட்சியர், செய்யாறு) திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செல்வி அபிலாஷா கெளர், இ.ஆ.ப., (சார் ஆட்சியர், பரமக்குடி) நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு திவ்யான்ஷீ நிகம், இ.ஆ.ப., (சார் ஆட்சியர், திண்டிவனம்) இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., (மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம்) தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர்/தலைமைச் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு ம. கோவிந்த ராவ், இ.ஆ.ப., (இயக்குநர்/தலைமைச் செயல் அலுவலர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை) தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றங்கள் ஆளுநரின் ஆணைப்படி நடைபெற்றுள்ளது. அரசு தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.
Click Here to Download - G.O 2367 - IAS Transfer - Pdf
No comments:
Post a Comment