சனிக்கிழமை வகுப்புகள் நடைபெறும் - அமைச்சர் அறிவிப்பு - Asiriyar.Net

Friday, May 26, 2023

சனிக்கிழமை வகுப்புகள் நடைபெறும் - அமைச்சர் அறிவிப்பு

 



தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். 


இந்நிலையில் விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்றும் அடுத்தாண்டு 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார். 


ஏற்கனவே நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஜூன் ஒன்று முதல் மூன்றாம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது இந்த பயிற்சிக்கான அட்டவணையில் எவ்வித மாற்றம் செய்யப்படவில்லை என்றும் பயிற்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .


மேலும் பள்ளிகள் ஒரு வாரம் தள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே திட்டமிட்டு அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டு நாட்காட்டியின் படி பள்ளி நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில்  பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது


முன்னதாக ஜூன் 1ஆம் தேதி முதல் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெயில் காரணமாக தற்போது பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Post Top Ad