அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை மது அருந்திவிட்டு தாக்கிய 12ஆம் வகுப்பு மாணவன் மீது வழக்குப்பதிவு - Asiriyar.Net

Wednesday, November 16, 2022

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை மது அருந்திவிட்டு தாக்கிய 12ஆம் வகுப்பு மாணவன் மீது வழக்குப்பதிவு

 



தலைமை ஆசிரியரை தாக்கிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது.


புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளை கேலி செய்ததாக புகார் வந்ததையடுத்து, மாணவனை தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமார் கண்டித்துள்ளார்.


இதனால் கோபத்துடன் பள்ளியைவிட்டு வெளியே சென்ற மாணவன், மது அருந்திவிட்டு மீண்டும் பள்ளிக்கு வந்ததால் தலைமை ஆசிரியர் அழைத்து எச்சரித்துள்ளார்.


இதனால் மாணவன் தாக்கியதில் பின்தலையில் காயமடைந்த தலைமை ஆசிரியர், அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad