டிசம்பர் 15 முதல் அரையாண்டு தேர்வு -மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் - Asiriyar.Net

Monday, November 28, 2022

டிசம்பர் 15 முதல் அரையாண்டு தேர்வு -மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள்

 



மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடைபெறுகிறது.


 தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


டிசம்பர் 15 நாள் முதல் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், டிசம்பர் 15 நாள் முதல் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கி, 23 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் 6, 8, 10, 12-ம் வகுப்புகளுக்குக் காலையிலும் 7, 9, 11- ம் வகுப்புகளுக்குப் பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad