பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 21, 2023

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

 

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான 'நீட்' நுழைவு தேர்வு, மே 7ம் தேதி நடக்க உள்ளது.


நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு, பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட்டால், பிளஸ் 2வில் தங்களின் எதிர்பார்ப்புக்கு குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள், நீட் தேர்வையும் சரியாக எழுத முடியாமல், மனதளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.


எனவே, மே 5ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடாமல், நீட் தேர்வு முடிந்த மே 7ம் தேதிக்கு பின், பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்றும், அதன் வாயிலாக மாணவர்களுக்கு மனக் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்றும், ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.








Post Top Ad