ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான குழுவின் இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு - Asiriyar.Net

Wednesday, October 1, 2025

ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான குழுவின் இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு

 



அரசு ஊழியர்கள், ஆசிரியர்​களுக்​கான ஓய்​வூ​தி​யம் தொடர்​பாக, ஊரக வளர்ச்​சித் துறை செயலர் ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட குழு, தனது இடைக்​கால அறிக்​கையை அரசிடம் சமர்ப்​பித்​துள்​ளது.


இதுகுறித்​து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் மற்​றும் ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டம் ஆகிய மூன்று ஓய்​வூ​தி​யத் திட்​டங்​கள் குறித்து விரி​வாக ஆராய்ந்​து, மாநில அரசின் நிதி நிலையினை​யும், பணி​யாளர்​களின் ஓய்​வூ​தி​யக் கோரிக்​கைகளை​யும் கருத்​தில் கொண்​டு, நடை​முறைப்​படுத்​தத்​தக்க ஓய்​வூ​தி​ய​முறை குறித்த பரிந்​துரை​யினை 9 மாதங்​களில் அரசுக்கு அளிக்க ஊரக வளர்ச்​சித்​துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி தலை​மையில், 3 அதி​காரி​கள் கொண்ட குழு கடந்த பிப்​ர​வரி மாதம் அரசால் அமைக்​கப்​பட்​டது.


அக்​குழு​ செப்​டம்​பர் மாதத்​துக்​குள் அறிக்கை அளிக்க வேண்டுமென அரசு அறி​வுறுத்​தியிருந்தது. இதன்படி, அரசுப் பணி​யாளர்களின் பல்​வேறு கோரிக்​கைகளை முழு​மை​யாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்ய, 194 அரசுப் பணி​யாளர் சங்​கங்​களு​டன் ஒன்​பது சுற்​றுகள் கூட்​டங்​களை நடத்​தி​யது.


மேலும், இந்​திய ஆயுள் காப்​பீட்டு கழகம் (எல்​ஐசி) மற்​றும் சம்​மந்​தப்​பட்ட நிதி நிறு​வனங்​களு​டன் பல்​வேறு கலந்​தாய்​வுக் கூட்​டங்​களை​யும் நடத்​தி​யது. துல்​லிய​மான மற்​றும் விரி​வான ஆய்​வு​களை மேற்​கொள்ள உறு​துணை​யாக காப்​பீட்​டுக் கணிப்​பாளர் மற்​றும் நிதி வல்​லுநர்​களின் சேவையை​யும் குழு பயன்​படுத்​தி​யது.


கடந்த 8 மாதங்​களில், 7.36 லட்​சம் பணி​யாளர்​கள் மற்​றும் 6.75 லட்​சம் குடும்ப ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் உட்பட ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களின் தரவு​களை சேகரித்​தல், அவற்​றில் இருந்த தவறுகளை நிவர்த்தி செய்​தல் மற்​றும் சரி​பார்த்​தல் உள்​ளிட்ட பணி​களை ஓய்​வூ​தி​யக் குழு விரி​வாக மேற்​கொண்​டுள்​ளது. கரு​வூலங்​கள் மற்​றும் கணக்​குத் துறை​யின் மூலம் ஒருங்​கிணைக்​கப்​பட்டு மேற்​கொள்​ளப்​பட்ட இந்த விரி​வான பணி​கள், மாநில அரசின் ஓய்​வூ​திய பொறுப்​பு​களை மதிப்​பீடு செய்​வதற்​கான உரிய தொழில்நுட்ப வழி​முறை​களை வழி​வகுக்க உதவி​யுள்​ளன.


சேகரிக்​கப்​பட்ட புள்ளி விவரங்​கள் மற்​றும் தரவு​களின் எண்​ணிக்கை அதி​கம் என்​ப​தா​லும், மத்​திய அரசு, சம்​மந்​தப்​பட்ட நிதி நிறு​வனங்​கள் மற்​றும் இந்​திய ஆயுள் காப்​பீட்டு கழகம் ஆகிய​வற்​றுடன் மேலும் கலந்​தாய்​வு​கள் நடத்த வேண்​டி​யிருப்​ப​தா​லும் குழு தனது பணி​யினை இறுதி செய்து அறிக்​கையை அளிப்​ப​தற்கு சற்று கூடு​தல் அவகாசம் தேவைப்​படு​கிறது.


இச்​சூழ்​நிலை​யில், இக்​குழு​வானது ஓய்​வூ​திய திட்​டங்​கள் குறித்த தனது இடைக்​கால அறிக்​கை​யினை அரசுக்கு நேற்று சமர்ப்​பித்​துள்​ளது. மத்​திய அரசு, நிதி​நிறு​வனங்​கள், எல்​ஐசி ஆகிய​வற்​றுட​னான கலந்​தாய்​வு​கள் மேற்​கொண்ட பின், குழு தனது இறுதி அறிக்​கை​யினை விரை​வில் அரசுக்கு சமர்ப்​பிக்​கும். இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



Click Here to Download - DIPR-P.R.No.2326-Pension Scheme - Press Release - (30.09.2025) - Pdf


கண்டனம்: 

ஒய்​வூ​தி​யம் தொடர்​பான குழு​வுக்கு காலஅவ​காசம் அளிக்​கப்​பட்​டதற்கு தமிழ்​நாடு தலை​மைச்​செயலக சங்​கம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. அத்​துடன் ஓய்​வூ​தி​யக்​குழு தனது நம்​பகத்​தன்​மையை இழந்​து​விட்​ட​தாக​வும் கருத்து தெரி​வித்​துள்​ளது.



No comments:

Post a Comment

Post Top Ad