பள்ளி மாணவ, மாணவியர் வரும் 9ம் தேதி வரை திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2022-23ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளி மற்றும் அனைத்துவகை பள்ளியில் பயிலும் (சி.பி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ) பதினொன்றாம் வகுப்பு மாணவ, மாணவிகள் ‘திறனறித் தேர்வு எழுத 9.9.2022 வரை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடம் இதற்கான பாடத்திட்டம் ஆகும். இத்தேர்வு கொள்குறி வகையில் (அப்ஜெக்டிவ் டைப்) நடைபெறும்.
ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். இத்தேர்வு 1.10.2022 அன்று முற்பகல் 10 முதல் 12 மணி வரை நடைபெறும். இத்தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேர்வில் வெற்றிபெறும் 1500 மாணவ, மாணவியர்களுள் 750 அரசு பள்ளி மாணவர்களும் 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.1500 இரண்டு ஆண்டுகளுக்கு தொகை வழங்கப்பட இருக்கிறது.
No comments:
Post a Comment