‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் (டிசம்பர்) 26-ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 5-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறந்த நிலையிலும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை விட்டபாடில்லை.
இப்படிப்பட்ட சூழலில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில், 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரி போராடும் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று (ஜனவரி 14, 2026) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,
இது தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் முக்கிய நடவடிக்கையாகும். ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராடி வருகின்றனர், அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடந்தும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமைச்சர் நேரடியாக தலையிட்டு இந்த அழைப்பை விடுத்துள்ளார், இது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:
Post a Comment