06.12.2025 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
ஜாக்டோ - ஜியோ மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 06.12.2025 அன்று திருச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு . பாஸ்கரன் , சே . பிரபாகரன் , இலா . தியோடர் ராபின்சன் ஆகியோர் கொண்ட கூட்டு தலைமையில் நடைபெற்றது .
அக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 2021 தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட லட்சக்கணக்கான அரசு ஊழியர் , ஆசிரியர் , அரசுப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான 10 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்தக்கோரி 25.11.2025 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பின்வரும் இயக்க நடவடிக்கைகளை மிக சக்தியாக நடத்திடுவது என முடிவாற்றப்பட்டது .

No comments:
Post a Comment